அவைத் தலைவரான உடனேயே ஆட்டம் போடும் செங்கோட்டையன்- அதிருப்தியில் அமைச்சர்கள்!
அதிமுக அவைத் தலைவரான செங்கோட்டையன் போடும் ஆட்டத்தால் அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தியில் உள்ளனராம்.
சென்னை: அதிமுக அவைத் தலைவரான உடனே செங்கோட்டையன் ஆட்டம் அதிகரித்துள்ளதால் அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக இரண்டாக உடைந்து போயுள்ளது. முதல்வர் ஓபிஎஸ் மற்றும் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா ஆகியோர் தலைமையில் அதிமுக பிளவுபட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் திடீரென முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்தார். இதனால் அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருந்து மதுசூதனன் நீக்கப்பட்டு செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
அதிமுகவின் அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டதுதான் தாமதம். அதிமுகவின் தலைவராக தம்மை நினைத்துக் கொண்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களிடம் அதிகார தோரணையில் பேசி வருகிறாராம்.
செங்கோட்டையன் ஏற்கனவே சல்லாப லீலைகளில் ஈடுபட்டதால் ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். இப்போது சசிகலா தயவில் அவைத் தலைவராகிவிட்ட செங்கோட்டையன் அதிகாரமாக ஆட்டம் போடுவதில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனராம்.
ADMK Ministers strongly opposed to party presidium chairman KA Sengottaiyan.
அதிமுக அவைத் தலைவரான உடனே செங்கோட்டையன் ஆட்டம் அதிகரித்துள்ளதால் அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications