படுகர் சங்க கூட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்த அதிமுக எம்.எல்.ஏ கைது
ஊட்டி: ஊட்டியில் நடந்த இளம் படுகர் சங்க கூட்டத்திற்கு கோர்ட் தடையை மீறி நுழைய முயன்ற அதிமுக எம்.எல்.ஏ புத்தி சந்திரன் கைது செய்யப்பட்டார். மோதல் தொடர்பாக புத்திசந்திரனுடன் வந்த 29 பேரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
உதகமண்டலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் புத்தி சந்திரன். இவர் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது அமைச்சர் பதவியை இழந்து விட்டார்.
இந்த நிலையில், இளம் படுகர் சங்கத்தின் செயற்குழு இன்று ஊட்டியில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வரக் கூடாது என்று ஏற்கனவே கோர்ட் புத்தி சந்திரனுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி கலந்து கொள்வதற்காக இன்று தனது ஆதரவாளர்கள் 29 பேருடன் கூட்டத்திற்கு வந்தார் புத்தி சந்திரன்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, மோதல் மூளும் சூழல் உருவானது. இதையடுத்து புத்தியையும், அவருடன் வந்தவர்களையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications