அடிமைகளாக 122 அதிமுக எம்.எல்.ஏக்கள்... குமுறும் சூலூர் எம்.எல்.ஏ - 'எக்ஸ்க்ளூசிவ்' வீடியோ
அதிமுகவில் எம்.எல்.ஏக்கள் அடிமைகள் போல் உள்ளனர். யாரோ ஒரு குரூப் அவர்களின் சுயநலத்துக்காக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறது என சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் வேதனையுடன் கூறியுள்ளார்.
கோவை: சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் தெரியாது. நீக்கியதும் தெரியாது. அதுபோல் தான் தினகரனை நீக்கியதும் தெரியாது. சுயநலத்துக்காக ஒரு குரூப் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் கூறியுள்ளார்.
சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் சமீபகாலமாக சிக்கலில் மாட்டி வருகிறார். திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்திய போது, அவரை சிறைபிடித்து வைத்தனர்.

போலீசார் அவரை மீட்க வந்தபோதுதான் அங்கு பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. மேலும் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் அறைந்தார். அது தமிழகம் முழுவதும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், கனகராஜ் எம்.எல்.ஏ தனது உள்ளக் கிடங்கிலிருந்த வேதனைகளை பகிர்ந்த கொண்ட வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. அதில்,'' எனக்கெல்லாம் சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கியதும் தெரியாது. நீக்கியதும் தெரியாது. பேப்பரில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். போட்டோம். ஆனால் அது பொதுச்செயலாளராக்குவதற்கான கையெழுத்து என்று தெரியாது.
அதுபோலத்தான், தினகரனை துணை பொதுச்செயலாளர் ஆக்கியதும் நீக்கியதும் யாருக்கும் தெரியாது. யாரோ ஒரு குரூப் அவர்களின் சுயநலத்துக்காக ஏதேதோ செய்துகொண்டிருக்கிறது. அதற்கு நாங்கள் 122சட்டமன்ற உறுப்பினர்கள் அடிமைபோல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்''என தன் மனதிலுள்ளதை வேதனையுடன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
அவர் 'சுயநல குரூப்' என்று யாரை குறிப்பிட்டார் என்பதுதான் குழப்பமாக உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications