சிறை பிடிக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளுநர் மாளிகையில் அணிவகுப்பு!
மன்னார்குடி கோஷ்டியால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளனர்.
சென்னை: மன்னார்குடி கோஷ்டியால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகையில் இன்று அணிவகுப்பு நடத்த உள்ளனர்.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா ஆட்சியை கபளீகரம் செய்ய முயற்சிப்பதற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களை மன்னார்குடி கோஷ்டி பேருந்துகளில் சிறைபிடித்து வைத்திருக்கிறது.

இந்த பேருந்து சிறையில் இருந்து தப்பிய ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் இதுவரை வெளிப்படையாக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் வியாழக்கிழமை பிற்பகல் சென்னை வருகை தர உள்ளார். அப்போது சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் வித்யாசகர் ராவை சந்திக்க உள்ளனர். இருப்பினும் இந்த சந்திப்பை ஆளுநர் மாளிகை உறுதிப்படுத்தவில்லை.












Click it and Unblock the Notifications