சொந்த ஊருக்கு போன முதல்வருக்கு வரவேற்பு கொண்டாட்டம் அமோகம்
சொந்த ஊருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம்: நேற்று இரவு விமானம் மூலம் கோவை சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து காரில் சேலம் அழகாபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார்.
சொந்த மாவட்டத்திற்கு சொந்த வீட்டிற்கு சென்ற முதல்வருக்கு வழிநெடுக அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். வீட்டிற்கு போகும் வழியில் ஈரோடு அருகில் நசியனூரில் உள்ள குலதெய்வத்தை வணங்கிவிட்டு தனது இல்லத்திற்கு சென்றார் பழனிசாமி.

முன்னதாக, ஈரோடு மாவட்ட அமைச்சரான கே.சி.கருப்பணன், எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜா சம்பத், ஈஸ்வரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பழனிசாமிக்கு மலர்கொத்து வழங்கி, பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முழுவதும் சேலத்தில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த பின்னர் நாளை சென்னை திரும்ப உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் தங்கி இருப்பதால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுபேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications