சென்னையில் நாளை அதிமுக எம்.பிக்கள் கூட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அதிமுகவின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி நாட்டின் 3வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. அத்துடன் 43% வாக்குகளையும் அதிமுக பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் நாளை அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 37 எம்.பி.க்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications