பதவியேற்றார் ஜெயலலிதா - உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 5வது முறையாக இன்று பதவியேற்றார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
முன்னதாக காலை 10.30 மணிக்கே தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டு விழா அரங்கினை வந்தடைந்தார்.

பதவியேற்பு விழாவினை முன்னிட்டு ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் முதல், சென்னை பல்கலைக்கழகம் வரையில் பிரம்மாண்ட வரவேற்பு பேனர்கள் குவிக்கப்பட்டிருந்தன.
ராகுகாலம் முடிந்து இல்லத்திலிருந்து புறப்பட்ட ஜெயலலிதாவிற்கு கேரள செண்டை மேளம் முழங்க, ஆரத்தி எடுத்து அனுப்பி வைத்தனர் அதிமுக தொண்டர்கள்.
போயஸ் கார்டனிலிருந்து வழிநெடுக குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இரட்டை இலைகளை கையில் பிடித்தும், கட்சிக் கொடியுடன் மகிழ்ச்சியாக ஆட்டம், பாட்டமென அதிமுக தொண்டர்கள் ஆண், பெண் பேதமின்றி களிப்பில் ஆழ்ந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications