திமுகவுக்கு ஏற்படும் இழப்பை விட அதிமுவுக்குத்தான் நிறைய ஏற்படும்- டி.ஆர்.பாலு
சென்னை: காங்கிரஸை இழப்பதால் திமுகவுக்கு ஏற்படும் இழப்பை விட தேமுதிகவை இழந்த அதிமுகவுக்குத்தான் அதிக இழப்பு ஏற்படும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து பாலு கருத்து தெரிவிக்கையில், தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட 5 எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்றவர்கள். எனவே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை கேட்க தி.மு.க.வுக்கு உரிமை உண்டு.

இது போல் காங்கிரசுக்கு உரிமை இருந்தது. ஆனால், டெல்லி ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யாரும் போட்டியிடவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பாஜக அல்லது காங்கிரஸ் ஆட்சியமைக்க திமுக ஆதரவு தருமா என்பது குறித்து தி.மு.க. பொதுக்குழு ஆலோசனையுடன் தலைவர் கருணாநிதி இதுகுறித்து முடிவு செய்வார். இப்போதே யூகத்திற்கு பதிலளிக்க முடியாது.
தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கூட்டணி இல்லாததால் ஏற்படும் இழப்பை விட, தே.மு.தி.க. இல்லாததால் அ.தி.மு.க.வுக்குதான் இழப்பு அதிகம் ஏற்படும் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications