அதிமுக பொதுக்குழுவில் பெண் நிர்வாகி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. மருத்துவமனையில் அனுமதி
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வர திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக் குழு கூடியது. இந்தக் கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் கூட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா உடல் நலமின்றி மறைந்தார். அவர் இறந்த பிறகு யார் அடுத்த பொதுச் செயலாளர் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே, இன்று அதிமுகவின் பொதுக் குழு மற்றும் செயற்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் கூடியது.
கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் கண்ணீர் மல்க இருக்கையில் அமர்ந்திருந்தனர். பல பெண்கள் கதறி அழுத வண்ணம் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் பெண் நிர்வாகி ஒருவர் திடீரென மயங்கி கிழே விழுந்தார். உடன் இருந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இதனால் பொதுக் குழுக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.