5000 ரூபாய் அதிமுகவுக்கு நல்ல பலனைக் கொடுத்துள்ளது...மு.க. ஸ்டாலின்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர்களுக்கு கொடுத்த பணம் பலன் அளித்துள்ளது என திமுக பொருளாளர் ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தனது ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் பதவி மற்றும் தமிழக முதலமைச்சர் பதவி ஆகியவற்றை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
அதனைத் தொடர்ந்து காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதுவரை எண்ணப்பட்ட ஓட்டுகளின் அடிப்படையில் அதிமுக வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியைச் சந்தித்தார் அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘ஸ்ரீரங்கம் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு ஆளும் கட்சி 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தது. ஆளும் கட்சி கொடுத்த பணத்திற்கு பலன் கிடைத்துள்ளது,' என்றார்.












Click it and Unblock the Notifications