திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திட்டம்: ஸ்டாலின் திடுக் தகவல்
திருவாரூர்: திமுக உறுப்பினர்கள் சிலரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்து ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு பலே திட்டம் வைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் இன்று மாலை பேட்டியளித்த அவர் இதுகுறித்து கூறியதாவது:
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை சட்டசபைக்கு ஆதாரத்தோடு எடுத்துக் காட்டவே குட்கா பாக்கெட்டுகளை சட்டசபைக்கு கொண்டு சென்று காண்பித்தேன்.

உரிமைமீறல்
தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, நான் உட்பட 20 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.

தப்பு இல்லை
இதன்பிறகும்கூட தமிழகத்தின் பல பகுதிகளில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. நான் சட்டசபையில் ஆதாரத்தோடு காட்டியதால்தான் அரசு நடவடிக்கையை எடுத்தது. எனவே நான் செயல்பட்ட விதத்தில் தவறு கிடையாது. ஆனால் எடப்பாடி அரசு
கொல்லைப்புறமாக ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். அதற்காக உரிமைமீறல் விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு திட்டம்
குட்கா விவகாரத்தில் உரிமை குழுவை இப்போது கூட்ட வேண்டிய அவசியம் என்ன? (28ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது). உரிமைமீறல் குழு நடவடிக்கையை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன். திமுக உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அது நடக்காது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆட்சி காப்பாற்ற
திமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ய, உரிமைக் குழு பரிந்துரை செய்தால், தினகரன் அணியினர், திமுகவினருடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க மேற்கொண்டாலும், அது முடியாமல் போகும் என எடப்பாடி தரப்பு கருதுகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஸ்டாலினும் அவ்வாறே கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications