ஜெ.வுக்கு நுரையீரல் அடைப்பை நீக்குவதில் முன்னேற்றம்- செயற்கை சுவாசம் இனி இல்லை! #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேற்கொள்ளப்பட்ட நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு இனி செயற்கை சுவாசம் தேவை இல்லை என அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை கூறியது.

லண்டன் மருத்துவர்
பின்னர் நோய்தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதற்கான லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பீலே வரவழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது.

நுரையீரல் அடைப்பு சிகிச்சை
இதனிடையே அப்பல்லோ நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏற்பட்டுள்ள அடைப்பை போக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தது.
|
மாலினி பார்த்தசாரதி
இந்த சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் இனி தேவை இல்லை என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனைத் தான் இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பார்த்தசாரதி தமது ட்விட்டர் பக்கத்தில் 'மகிழ்ச்சியுடன்' பதிவு செய்திருக்கிறார்.

இன்றைய அறிக்கையில்?
இன்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிடும் செய்திக் குறிப்பில் ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தேவை இல்லை என குறிப்பிடப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications