நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது ரூ.389 கோடி மோசடி புகார்!

நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது 389 கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது 389 கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்துள்ளது.

வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11400 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சர்வதேச போலீஸின் உதவியை நாடியுள்ளது.

After Nirav Modi and Mehul Choksi, the CBI has registered a case for fraudulent Rs 389 crore

இந்த மோசடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்
டெல்லியிலுள்ள ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ் (ஓபிசி) வங்கியில் 389.85 கோடி நிதி மோசடி செய்ததாக டெல்லி வைர ஏற்றுமதி நிறுவனமான துவர்கா தாஸ் சேத் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளது.

2007-2012 ஆம் ஆண்டில் ஓபிசி வங்கியிலிருந்து பல்வேறு கடன் வசதிகளை பெற்றுள்ள இந்நிறுவனம் 389 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பிறகே வங்கியானது சிபிஐயிடம் துவர்கா தாஸ் சேத் நிறுவனத்தின் இயக்குனர்களான சப்த் சிங், ரீடா சிங், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர்களுக்கு எதிராக நிதி மோசடி புகார் அளித்துள்ளது.

துவர்கா தாஸ் சேத் நிறுவனமானது வங்கியில் வழங்கப்படும் லெட்டர்ஸ் ஆஃப் க்ரெடிட் சேவையின் மூலம் பிற நாடுகளில் தங்கம் மற்றும் பிற விலையுயர்ந்த கற்களை போலியான முறையில் பரிவர்த்தனைகள் செய்ததை தற்போது வங்கி கண்டுபிடித்துள்ளது. நீரவ் மோடியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வைர ஏற்றுமதியாளர் மீது மோசடி புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+