வாடகை வீட்டுக்காரர்களின் கழுத்தை நெறிக்கும் கரண்ட் பில்!
சென்னை: பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது மாநில அரசு.
இந்த அதிர்ச்சி விலகும் முன்பாக சில தினங்களுக்கு முன்னர் 15 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தி மேலும் 'ஷாக்' கொடுத்துள்ளது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மின் கட்டண உயர்வு சொந்த வீட்டுக்காரர்களை விட வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்குத்தான் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இனி கரண்ட் பில் வாடகை வீட்டுக்காரர்களின் கழுத்தை நெறிக்கப்போகிறது என்பதுதான் உண்மை.
மாதம் ஒன்றுக்கு 200 யூனிட் மின்சாரம்... பயன்படுத்துபவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்கின்றது தமிழக மின்சார வாரியம்.
ஆனால் சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் உள்ள,எல்லா வாடகை வீடுகளிலும் சப் மீட்டர் வைத்தே பணம் வசூலிக்கின்றனர்.
அதாவது 100 யூனிட் வரை பயன்படுத்தியவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.60 என்றும் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் கட்டணம் என்று அட்டவணையை அரசு நிர்ணயித்துள்ளது.
இன்று சென்னையில் வாடகை வீட்டில் ஒரு யுனிட்டுக்கு வசூலிக்கபடும் தொகை முறையே 6 முதல் 8 ரூபாய் வரை இடத்துக்கு தக்கவாறு வசூலிக்கின்றார்கள்... இதில் சொந்த வீட்டுகாரர் அவர் வீட்டுக்கு வரும் கரண்ட் பில் தொகையை கட்டுவதே இல்லை. அதான் வாடகை தாரர்களிடம் வசூலித்து கட்டிவிடுகின்றனரே அப்புறம் என்ன?
பொதுவாக வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் அட்வான்ஸ் வாங்கும் போதே மின்கட்டணம் யூனிட்டிற்கு 8 ரூபாய் என்றுதான் பேசி பீதியை கிளப்புவார்கள். வாடகை 10000 ரூபாய் என்றால் அதோடு கூடுதலாக மின்சாரத்திற்கு மட்டுமே ரூ.1500 செலவாகிவிடும்.
தற்போது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் 15 சதவிகித மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், வீட்டின் உரிமையாளர்களும் ஒரு யூனிட் 15 ரூபாய் வரை உயர்த்துவதாக வாடகைதாரர்களிடம் சொல்லி விட்டனர். இதனால் இனி சாதாரண குடும்பங்களில் மின்கட்டணத்துக்கு மட்டுமே சில ஆயிரங்களை ஒதுக்கி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்தாலும் யாரும் புகார் கொடுப்பதில்லை. காரணம் வாடகைக்கு வீடு கிடைப்பது சென்னையில் மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் மின் கட்டணத்தை வேறுவழியின்றி வாடகைதாரர்கள் செலுத்தி வருகின்றனர்.
மின்கட்டண கொள்ளை பற்றி குரல் கொடுத்தாலோ வீடுகளை காலி செய்துதான் ஆகவேண்டும். எனவே பழகிய ஏரியா, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை கருத்தில் கொண்டு வீட்டு உரிமையாளர்கள் கேட்டதை கொடுத்து விட்டு மனஅழுத்தத்தோடு வாழ்க்கையை நடத்துகின்றனர் ஏழை மற்றும் நடுத்தரவாசிகள்.
விண்ணை முட்டும் விலைவாசியோடு மின்கட்டண உயர்வும் வாட்டி வதைப்பதால் சம்பாதிக்கும் பணமெல்லாம் வாடகைக்கும், மின்கட்டணத்திற்கும் கொடுக்கவேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர் நடுத்தரவாசிகள். மின்சாரம் என்கிற வார்த்தையை உச்சரித்தாலே இனி ஷாக் அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் வாடகை வீடுதாரர்கள் என்பதே உண்மை.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications