அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு திடீர் தடை! ஜாமீனில் வெளிவர முடிவு
திருநெல்வேலி: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் பேச சிறை வார்டன்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி டிரைவர்கள் நியமனத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அமைச்சர், அதிகாரிகளின் நெருக்கடியே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனிடையே இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விசாரணை கைதிகளையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் தண்டனை கைதிகளையும் அவர்களது உறவினர்கள் சந்தித்து பேச முடியும். எல்லா நாட்களிலும் வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதி உண்டு. அதனால், சிறையில் இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அவரது வழக்கறிஞர் தினமும் சந்தித்து பேசி வருகிறார்.
ஜாமீன் மனு தாக்கல்
பொறியாளர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இதுவரை அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. அவரது வழக்கறிஞர் தினமும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடுத்த வாரம் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
வார்டன்கள் பேச தடை
இந்நிலையில், சிறையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வார்டன்கள் பேச சிறை நிர்வாகம் திடீர் தடை விதித்து உள்ளது. அதன்படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் நெருங்கி பேச வேண்டாம் என்று வார்டன்களுக்கு ரகசிய உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தேவையில்லாமல் ரோந்து சென்று அவரை கண்காணிக்க வேண்டாம் எனவும், அவருக்கு பொருட்கள் எதுவும் வாங்கி கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications