சிறையிலிருந்து வெளியில் வந்தார் “அக்ரி” - சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்துப் போட்டார்!
மதுரை: வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் இன்று பாளையங்கோட்டை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நெல்லையில் வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 60 நாட்களுக்கு பிறகு பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து அவர் வெளியில் வந்தார்.

நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமராசாமி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சென்னை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் நாள்தோறும் கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை சிறையிலிருந்து வெளியில் வந்துள்ளார்.
முன்னதாக, அக்ரி கிருஷ்ணமூர்த்தி தினமும் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நிபந்தனை விதித்திருந்தது.
இதன்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று காலை 10.10 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்து விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி அவர் கையெழுத்து போட்டார். பின்னர் 10.20 மணியளவில் தனது காரில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி புறப்பட்டு சென்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications