முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு.. அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் பி ஏ ரகசிய வாக்குமூலம்
நெல்லை: நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரசு தரப்பு உதவியாளராக இருந்த பாண்டியன் சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி இன்று ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரியாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பணி நியமனம் தொடர்பாக அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்த நெருக்கடி காரணமாகவே முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

முத்துக்குமாரசாமி விவகாரம் பூதாகரமாக உருவானதைத் தொடர்ந்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறி போனது. அதோடு, தற்கொலைக்குத் தூண்டியதாக முன்னாள் அமைச்சர் ‘அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தற்போது இவர்கள் ஜாமீனில் இருந்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அரசுத் தரப்பு உதவியாளராக இருந்த பாண்டியன் என்பவர் சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ரகசிய வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதில் அவர், "வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அலுவலக ரீதியாக சில முறை அவரிடம் தொலைபேசியில் பேசியது உண்மைதான். ஆனால், பணியாளர் நியமனம் தொடர்பாகவோ, பண விவகாரம் குறித்தோ அவரிடம் எதுவும் பேசியதில்லை.
அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் யாரும் அவருக்கு நெருக்கடி கொடுத்தார்களா என்பதும் எனக்கு தெரியாது' என வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
பாண்டியனின் இந்த ரகசிய வாக்குமூலத்தால் முத்துக்குமாரசாமி வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications