அதிகாரி தற்கொலை வழக்கில் சிறையில் 'அக்ரி'.. தோள்தட்டும் 'சமூகம்' போஸ்டரால் பரபரப்பு
சென்னை: வேளாண்துறை பொறியாளர் முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு ஆதரவாக 'அவரது சமூக'த்தின் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நெல்லை வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20-ந் தேதி ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வழக்கில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து முதலில் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் பதவியும் பறிபோனது. இந்நிலையில் நேற்று அதிகாலை அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு ஆதரவாக அவரது 'சமூக'த்தின் பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் வேண்டுமென்றே சதி செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதான் அந்த போஸ்டர்...












Click it and Unblock the Notifications