வந்தது இடைத் தேர்தல்.. நாளைக்கே விருப்ப மனு.. மின்னல் வேகத்துக்கு மாறிய அதிமுக, திமுக
நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக, திமுக அறிவித்துள்ளது
Recommended Video
சென்னை: இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என அதிமுக, திமுக இறங்கிவிட்டது போலும்.. நடக்க போகும் இடைத்தேர்தலுக்கு நாளைக்கே விருப்ப மனுவை அளிக்கலாம் என இரு கட்சிகளுமே மின்னல் வேகத்தில் அறிவித்து அரசியல் வட்டாரத்தை தட்டி எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் செப்டம்பர் 23ம் தேதி அதாவது வர்ற திங்கட்கிழமை தொடங்குகிறது. செப்டம்பர் 30-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.

அறிவிப்பு
மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1-ம் தேதி என்றும், மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக இரு கட்சிகளும் அதிரடியாக தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. இவர்கள் இருவருமே இந்த தேர்தலுக்காகவே காத்துகிடந்தவர்கள் போல, மின்னல் வேகத்தில் இறங்கி விட்டனர்.

அதிமுக
நாளை முதல் விருப்ப மனு வழங்கலாம் என்று அதிமுக சொல்லிவிட்டது. இது சம்பந்தமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி
அதில், "விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 21-10-2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, போட்டியிட விரும்புவோர், தலைமைக் கழகத்தில் நாளை காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அப்படிவங்களை 23-9-2019 அன்று பிற்பகல் 3 மணிக்குள் தலைமைக் கழகத்தில் வழங்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளனர்.

திமுக பொதுக்குழு
இதேபோல, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் திமுக போட்டியிடும் என்று முக ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளதுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு நாளை விருப்ப மனு பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வரும் 6-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

விருப்ப மனு
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று நடைபெறவிருந்த முதல் பொதுக்கூட்டம் என்பதால், ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டு இருந்தன. ஆனால், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இந்த பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைப்பதாகவும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

பரபரப்பு
அப்படியானால், இந்த இடைத்தேர்தலை சந்திக்க அதிமுகவை போலவே திமுகவும் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளது. அதனால்தான் திமுக, அதிமுக இரு மெகா கட்சிகளுமே நாளைக்கே விருப்பமனுவை வழங்கலாம் என அறிவித்து ஜரூர் வேலையில் இறங்கி உள்ளனர். இதனால் அரசியல் வட்டாரமே பரபரத்து காணப்படுகிறது.
-
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி!












Click it and Unblock the Notifications