ஜூன் 21ல் அதிமுக செயற்குழு… 2016 சட்டமன்ற தேர்தலுக்கு வியூகம்!
சென்னை: அதிமுக செயற்குழு கூட்டம் வரும் ஜூன் 21ம் தேதி தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 4.20 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழகத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.
அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஆண்டுக்கு இருமுறை
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிகளும் செயற்குழுவையும், பொதுக்குழுவையும் கூட்டி வருவது வழக்கம்.

லோக்சபாவிற்கு முன்பு
அந்தவகையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரலாறு காணாத வெற்றி
இதைத்தொடர்ந்து வந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. சொல்லியடித்து போல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றிவாகை சூடியது. வரலாறு காணாத இந்த வெற்றி தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தியது.

ஜூன் 21ல் செயற்குழு
தேசிய அளவில் அ.தி.மு.க. 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தநிலையில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு, இந்த ஆண்டிற்கான அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

2016 சட்டமன்ற தேர்தல்
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற பிரமாண்ட வெற்றி, 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் அ.தி.மு.க.வினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும், தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து?












Click it and Unblock the Notifications