சசிகலாவுக்கு எதிர்ப்பு.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாஜி எம்.எல்.ஏ. சிங்காரம் ஆதரவு
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தெரிவித்துள்ளார்.
தர்மபுரி: மொரப்பூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் சிங்காரம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு திடீரென ஜெயலலிதா சமாதியில் மவுன புரட்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் ஆதரவு விஸ்வரூபமெடுத்து வருகிறது. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று நேரில் சந்தித்த சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ ராஜமாணிக்கம், கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிங்காரம் அதிமுக-வில் 18 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராக பொருப்பு வகித்தவர். மூன்று முறை மொரப்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மேலும், 2001 முதல் 2006 வரை ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சேர்மன் பதவியும் வகித்தவர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பிமுனுசாமி தலைமையில் ஒ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications