50 ஆண்டு காலத்தில் திமுகவைவிட அதிமுக அரசுதான் சிறப்பாக செயல்பட்டது - புதிய தலைமுறை கருத்து கணிப்பு
சென்னை: கடந்த 50 ஆண்டு காலத்தில் திமுகவைவிட அதிமுக அரசுதான் சிறப்பாக செயல்பட்டது என புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஆப்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலத்தில் நல்லாட்சியை வழங்கிய அரசு எது? என்பது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஆப்ட் நிறுவனமும் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தியது.

கடந்த ஜனவரி 22-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதில் நல்லாட்சியை வழங்கிய அரசு எது? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
அதிமுக 34.48%;
திமுக 33.33%
அதிமுக - திமுக ஆகிய இரண்டு அரசுகளும் நல்லாட்சியை வழங்கவில்லை என்ற கேள்விக்கு 22.79 % பேர் வாக்களித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் சிறந்த அரசு எது என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்:
அதிமுக 36.65%;
திமுக 29.63%
சட்டம் ஒழுங்கை அதிமுக, திமுக ஆகிய இரண்டு அரசுகளும் பாதுகாக்கவில்லை என 23.18% பேர் வாக்களித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications