வரலாம் வரலாம் வா... ஓபிஎஸ் அணியை நிபந்தனையின்றி பேச அழைக்கும் எடப்பாடி அணி
ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்றும் நிபந்தனையின்றி பேச நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ஒற்றுமைக்காக தங்கள் அணி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம் கூறியுள்ளார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி அமர்ந்து பேசினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றும் ஓபிஎஸ் அணியினர் பேச வரவேண்டும் என்றும் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
பிரிந்துபோன இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஓபிஎஸ் அணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும் தனித்தனியாக இரு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

குழுக்கள் தயார்
பன்னீர் குழுவில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், பாண்டியராஜன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகிய ஏழு பேர் குழுவில் உள்ளனர். எடப்பாடி குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தலைமையில், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, வீரமணி ஆகிய ஏழு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டி தட்டும் குழுவினர்
இரு அணியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி பேட்டி கொடுப்பதால் பிரச்சினைகளும், சிக்கல்களும் ஏற்படுகின்றன. எடப்பாடி அணியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் பேட்டிக்கு உடனடியாக எதிர்வினை ஓபிஎஸ் அணியின் கே.பி முனுசாமியிடம் இருந்து வருகிறது.

ஜெயலலிதா மரணம்
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே பி முனுசாமி ஜெயலலிதா மர்ம மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றினால் எவ்வித கருத்து வேறுபாடு இன்று இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறினார்.

நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை
அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம், ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என்றார். அமர்ந்து பேசினால் மட்டுமே கருத்தொற்றுமை ஏற்படும். பேச வரும் முன்பே நிபந்தனை விதிப்பது சரியாகாது என்றார். ஓபிஎஸ்தான் முதலில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார். அதனை தம்பித்துரை வரவேற்றார். இப்போது அவர்கள் மாறி மாறி பேசுகின்றனர் என்று கூறினார் வைத்திலிங்கம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications