இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊழல் மிகுந்த அரசு... தினகரன் அணிக்கு தாவிய எம்.பி. செங்குட்டுவன்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊழல் மிகுந்த அரசு நடைபெறுகிறது என அதிமுக எம்.பி. செங்குட்டுவன் சாடியுள்ளார்.
சென்னை: இந்தியாவிலே தமிழகத்தில்தான் ஊழல் மிகுந்த அரசாக இருக்கிறது என தினகரன் அணிக்கு தாவிய வேலூர் எம்.பி. செங்குட்டுவன் சாடியுள்ளார்.
ஓபிஎஸ் அணியில் இருந்த எம்.பி.க்கள் உதயகுமார், செங்குட்டுவன் இன்று தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் செங்குட்டுவன் கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஊழல் அரசு என்று ஓபிஎஸ் கூறினார். நாங்களும் அதைத்தான் இப்போதும் கூறுகிறோம்.
ஆனால் துறைகள் கிடைத்தவுடன் தற்போது எடப்பாடி அரசில் இணைந்துவிட்டார் ஓபிஎஸ். அனைவரும் சுயநலத்துக்காக நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சசிகலா அல்லது தினகரனால்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதை மீறி எடப்பாடி தரப்பு கூட்டும் பொதுக்குழு செல்லாது.
இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.












Click it and Unblock the Notifications