For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவனிக்க ஆளில்லாததால் தானே சுடுகாட்டில் சென்று இறந்த எய்ட்ஸ் நோயாளி

Google Oneindia Tamil News

பழனிசெட்டிபட்டி: கவனிக்க யாரும் இல்லாததால் எய்ட்ஸ் நோயாளி ஒருவர் தானாகவே சுடுகாட்டில் சென்று படுத்து இறந்த சம்பவம் அனைவர் மனதையும் உருக்கி உள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் சந்திரசேகர்.

இவர் எய்ட்ஸ் நோயாளி. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

எய்ட்ஸ் நோயாளி:

இருந்தபோதும் நோயின் தாக்கம் குறையாததால் அடிக்கடி மதுபோதைக்கும் அடிமையானார். இதனால் இவரது உடல்நிலை மேலும் மோசமானது. எய்ட்ஸ் நோயாளியான இவரை கவனிக்க யாரும் இல்லை. இதனால் சாப்பாட்டுக்கும் மிகுந்த கஷ்டப்பட்டார்.

சுடுகாட்டுக்கு சென்றவர்:

தனது உடல்நிலை மேலும் மோசமானதை உணர்ந்த சந்திரசேகர் இனி நான் பிழைக்க மாட்டேன் என்று நினைத்து சுடுகாட்டில் படுத்து கொண்டார்.

இறந்து போன சந்திரசேகர்:

உடல் சோர்ந்த நிலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாக வந்தவர்கள் சந்திரசேகர் இறந்து கிடந்ததை கண்டு ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை:

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்விக்குறி:

ஒரு நோயாளி ஒருவர், கவனிக்க ஆளில்லாமல் இறந்த இச்சம்பவம் மனிதநேயத்தினைப் பற்றிய ஒரு பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
AIDS patient died in grave yard. He didn’t have any person to care about his. So only he does like this and died. Police filed case about this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X