மதுரை - பெங்களூர் மார்க்கத்தில் கூடுதல் சேவையை அறிமுகப்படுத்தியது.. ஏர் பிகாசஸ்
சென்னை: ஏர் பிகசாஸ் நிறுவனம் மதுரை - பெங்களூர் மார்க்கத்தில் கூடுதலாக ஒரு விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஏர் பிகாசஸ் நிறுவனம் ஹூப்ளி, திருவனந்தபுரம், மதுரை, மங்களூர், சென்னை, கடப்பா ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை நடத்தி வருகிறது.

விரைவில் தூத்துக்குடி, பெல்காம், ராஜமுந்திரி, புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மதுரை - பெங்களூர் இடையிலான சேவையில் இன்னொரு விமான சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது மதுரை டூ பெங்களூருக்கு தினசரி மாலை ஒரு விமான சேவை மட்டும் இருந்து வருகிறது. இதை கூடுதலாக்கியுள்ளது இந்த நிறுவனம்.
அதன்படி காலை 10.25 மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பும் விமானம் முற்பகல் 11.35 மணிக்கு மதுரையை சென்றடையும். மரு மார்க்கத்தில் மதுரையிலிருந்து 12 மணிக்குப் புறப்பட்டு 1.15 மணிக்கு பெங்களூரை வந்தடையும்.
இதில் சலுகை அடிப்படையில் ஒரு வழிக்கட்டணமாக 1,599 ரூபாய் வசூலிக்கப்படும். இருவழிகட்டணமாக 2,999 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் ஏர் பிகாசஸ் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications