சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்.. போக்குவரத்து நெரிசல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியலால் பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியலால் பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஏர்செல் செல்போன் சேவை கடந்த சில நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமல் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

இதனைக் கண்டித்து பல இடங்களில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடந்து சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதால் தங்களின் நிறுவனத்தை திவாலாகி விட்டதாக அறிவிக்கக்கோரி தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் அண்மையில் மனு அளித்தது.
ஏர்செல் நிறுவனத்தின் மனுவை ஆராய்ந்த தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்பாயம், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்தின் சேவை ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஏர்செல் வாடிக்கையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஏர்செல் சர்வர்கள் செயல்படாததை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்திய வாடிக்கையாளர்கள் போர்ட் எண் தராததால் கைபேசி எண்ணை பிற சேவை நிறுவனத்துக்கும் மாற்ற முடியவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் போராட்டத்தால் பூவிருந்தவல்லி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications