நெட்வொர்க் பிரச்சினை சரியானது.. அறிவித்தது ஏர்செல்!
சென்னை: ஏர்செல் சேவை முடக்கம் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த நாலைந்து நாட்களாக ஏர்செல் நெட்வொர்க் சேவை முற்றிலும் முடங்கி போயுள்ளது. வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றுவதற்கு கூட முடியாத அளவுக்கு நெட்வொர்க் முற்றிலும் இல்லாமல் போனது.
கோவை, சென்னை போன்ற இடங்களில் ஏர்செல் அலுவலகங்களை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒப்பந்தம் செய்து கொண்ட டவர்களில் தங்கள் சிக்னல்களை நிறுத்திவிட்டதுதான் இதற்கு காரணம் என ஏர்செல் விளக்கம் அளித்திருந்தது.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் 2 நாட்கள் முன்பு அளித்த பேட்டியில், பேச்சுவார்த்தை நடத்தி டவர்களை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 3 நாட்களுக்குள் சேவை சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

டிராய் கண்டிப்பு
இதையடுத்து படிப்படியாக சேவை மீண்டு வருகிறது. டிராய் அமைப்பின் தலைவர் ராம் சேவக் ஷர்மா டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், முன்னறிவிப்பு இன்றி வாடிக்கையாளர்களின் சேவையை துண்டித்தது சட்ட விரோதம் என கூறியிருந்தார். வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஏர்செல் நிறுவனம் சேவையை வழங்க வேண்டும் என எச்சரித்தார்.

நிலைமை சரியானது
இந்த நிலையில், நிலைமை சரியாகிவிட்டதாக இன்று சங்கர நாராயணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதேநேரம், முழுமையாக நிலைமை சீரடையவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள். நெட்வொர்க் விட்டுவிட்டு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

என்ன செய்யலாம்
வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து, திரும்பவும் ஆன் செய்தால் தடையற்ற சேவை கிடைக்கும் என்று ஏர்செல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கிடைக்கும் நெட்வொர்க்கை பயன்படுத்தி வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக்கொள்ள வாடிக்கையாளர்கள் அலைமோதுகிறார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications