20 தமிழர்கள் சுட்டுக்கொலை: அப்பட்டமான மனித உரிமை மீறல்… சரத்குமார் கண்டனம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

AISMK protest after police in Andhra kill 20 Tamil workers

சமக தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றார்.

AISMK protest after police in Andhra kill 20 Tamil workers

ஆந்திர வனத்துறை அமைச்சர், தமிழக தொழிலாளர்கள் மீண்டும் வந்தால் சுட்டுக்கொல்வோம் என்று பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தியா ஜனநாயக நாடு. சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இந்த விசயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

AISMK protest after police in Andhra kill 20 Tamil workers

இதேபோல 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாளை மார்க்கெட் திடலில் மாவட்ட செயலாளர்கள் சேவியர் லாரன்ஸ், அதியமான் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+