அனுமதியின்றி பிறந்த நாள் வாழ்த்து பேனர் வைத்த அஜித் ரசிகர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை மாநகராட்சியிலுள்ள சுந்தராபுரம் பகுதியில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி மே 1ம்தேதியான ஞாயிற்றுக்கிழமை காலை சிலர் அப்பகுதியில் பிளக்ஸ் போர்டு வைப்பதாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீஸார், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட அந்த விளம்பரப் பதாகையை அகற்றினர். மேலும், இது தொடர்பாக போலீஸார், குறிச்சி ஹவுசிங்யூனிட் பகுதியைச் சேர்ந்த எஸ்.மகேஷ் (25) என்பவரைக் கைது செய்தனர். பின்னர் போலீஸார், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
அனுமதியின்றி பேனர் வைத்ததால் அஜித் ரசிகர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை பகுதியில் சினிமா ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications