Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியை: இன்று அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுப்பார்கள், பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தான தர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துர்முகி வருஷம் சித்திரை மாதம் 26 ம் தேதி இன்று அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நன்னாளில் நான்கு யுகங்களில் முதன்மையானது எனப்படும் கிருத யுகம் தோன்றியது.

அட்சய திருதியை வடநாட்டில் இந்த நாள் அகதீஜ் என்று கொண்டாடாப்படுகிறது. மங்களனாகிய சிவனை வணங்கினால் பெரும் பாக்கியத்தைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய தினம் மேற்கொள்ளப்படக்கூடிய தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்ப்பணம், தீர்த்த ஸ்நானம் ஆகியவை குறைவற்ற பலனைக் கொடுக்கும்.

அக்னியில் ஆகிருதி செய்யப்பட்ட பொருட்களும் தானம் செய்த பொருட்களும் குறைவதே இல்லை. இந்த நாளைத்தான் ரிஷிகள் ‘அட்சய' என்று போற்றினார்கள். இன்று தேவர்களுக்காகவும் பித்ருக்களுக்காகவும் தானம் செய்யப் பட்டவை மென்மேலும் பெருகும்.

Akshaya Tritiya Day – Prayers and Pujas

•அட்சய திருதியை நன்னாளில், துவாபரயுகத்தில் கிருஷ்ண பரமாத்மா குசேலருடைய தரித்திரத்தைப் போக்கி குறைவற்ற செல்வத்தை வழங்கினார்.

•இந்த அட்சய திருதியை நன்னாளில் தான் கலியுகத்தில் ஆதிசங்கர பகவத்பாதாள் ஏழ்மையைப் போக்கும் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றி அதன்மூலம் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்.

•இப்படிப்பட்ட நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் நல்மனதுடன் கடமைகளைச் செய்து, தாராளமாக பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

•சாஸ்திரப்படி செய்யும் தானம், தர்மம் செய்யும் சுபச் செலவானது உண்மையான வங்கியில், பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு, நமக்கு எந்தப் பிறவியில், எந்த லோகத்தில், நமக்கு எந்த விதமாகா தேவைப்படுகிறதோ அந்த விதத்தில் பொருளாகவோ, பணமாகவோ அசலுடன் பன்மடங்கு வட்டியுடன் நமக்கு வந்தே தீரும்!

•ஆகையால் இந்த அட்சய திருதியை நன்னாளில் நம்மால் இயன்ற அளவு தானங்களைச் செய்து புண்ணியங்களைப் பெறலாம்! தண்ணீர், நீர் மோர், விசிறி, அன்னதானம் செய்யலாம்!

•ஆடைகள், பழங்கள் தானம் செய்தால் சிறப்பான வாழ்க்கை கிடைக்கும்

•அன்னதானம் செய்தால் வாழ்நாள் முழுவதும் உணவுக்குப் பஞ்சமிருக்காது

•நீர்மோர், பானகம் தானம் செய்பவர்களுக்கு குழந்தைகள் கல்வியில் உயர்நிலை பெறுவர்

•அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்கள் தானம் செய்தால் அகால மரணங்கள் ஏற்படுவதில் இருந்து நிவர்த்தி

•தயிர் சாதம் தானம் செய்தால் பாவங்கள் ஒழியும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+