எங்களுக்கு ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்கனும், அவ்வளவுதான்... அலங்காநல்லூர் மக்கள் ஒரே போடு!
நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதை மட்டுமே ஏற்போம் என்று அலங்காநல்லூர் மக்கள் கூறி விட்டனர்.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் என்பதையெல்லாம் ஏற்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுக்கு ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க வேண்டும். எப்போதும் போல நடக்க வேண்டும். அதுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்க. வேறு எது செய்தாலும் நாங்க ஏற்க மாட்டோம் என்று அலங்காநல்லூர் மக்கள் ஒரேயடியாக கூறி விட்டனர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவசரச் சட்டம் கொண்டு வரப் போவதாக கூறினார். இதையடுத்து போராட்டம் வென்ற ரீதியில் சிலர் செய்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில் போராட்டக்களத்தில் உள்ள இளைய தலைமுறையினரும், அலங்காநல்லூர் கிராம மக்களும் இதை ஏற்கவில்லை, முழுமையாக நிரா்கரித்துள்ளனர் என்பதே உண்மை நிலவரமாக உள்ளது.

இதுகுறித்து போராட்டக்களத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராம மக்கள் கூறுகையில், அவசரச் சட்டம் என்று சொல்வதையெல்லாம் நம்ப நாங்கள் தயாராக இல்லை. தேதியை குறிக்கச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டு தேதியைச் சொன்னால்தான் நாங்கள் ஏற்போம். காளைகள் தயாராக உள்ளன. மாடு பிடி வீரர்களும் தயாராக உள்ளனர். நாங்க எப்ப வேண்டும்னாலும் ஜல்லிக்கட்டு நடத்தத் தயார். அனுமதிக்கு மட்டுமே காத்திருக்கிறோம்.
அது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க வேண்டும். வழக்கம் போல நடக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அது மட்டுமே நிர்ந்தர தீர்வாகும். அதை மட்டுமே நாங்கள் ஏற்போம் என்று அடித்துக் கூறி விட்டனர்..
இதே உணர்வு, கோரிக்கையுடன்தான் மெரீனா கடற்கரைப் போராட்டக்களத்திலும் இளைஞர்கள் ஒரே குரலில் கூறி வருகின்றனர். எனவே முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் உத்தரவாதமும், பேச்சும் போராட்டக்காளத்தில் உள்ளவர்களின் மத்தியில் எடுபடவில்லை என்பதே எதார்த்தமாகும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications