எங்களுக்கு ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்கனும், அவ்வளவுதான்... அலங்காநல்லூர் மக்கள் ஒரே போடு!
நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதை மட்டுமே ஏற்போம் என்று அலங்காநல்லூர் மக்கள் கூறி விட்டனர்.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் என்பதையெல்லாம் ஏற்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுக்கு ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க வேண்டும். எப்போதும் போல நடக்க வேண்டும். அதுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்க. வேறு எது செய்தாலும் நாங்க ஏற்க மாட்டோம் என்று அலங்காநல்லூர் மக்கள் ஒரேயடியாக கூறி விட்டனர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவசரச் சட்டம் கொண்டு வரப் போவதாக கூறினார். இதையடுத்து போராட்டம் வென்ற ரீதியில் சிலர் செய்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில் போராட்டக்களத்தில் உள்ள இளைய தலைமுறையினரும், அலங்காநல்லூர் கிராம மக்களும் இதை ஏற்கவில்லை, முழுமையாக நிரா்கரித்துள்ளனர் என்பதே உண்மை நிலவரமாக உள்ளது.

இதுகுறித்து போராட்டக்களத்தில் உள்ள அலங்காநல்லூர் கிராம மக்கள் கூறுகையில், அவசரச் சட்டம் என்று சொல்வதையெல்லாம் நம்ப நாங்கள் தயாராக இல்லை. தேதியை குறிக்கச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டு தேதியைச் சொன்னால்தான் நாங்கள் ஏற்போம். காளைகள் தயாராக உள்ளன. மாடு பிடி வீரர்களும் தயாராக உள்ளனர். நாங்க எப்ப வேண்டும்னாலும் ஜல்லிக்கட்டு நடத்தத் தயார். அனுமதிக்கு மட்டுமே காத்திருக்கிறோம்.
அது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடக்க வேண்டும். வழக்கம் போல நடக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். அது மட்டுமே நிர்ந்தர தீர்வாகும். அதை மட்டுமே நாங்கள் ஏற்போம் என்று அடித்துக் கூறி விட்டனர்..
இதே உணர்வு, கோரிக்கையுடன்தான் மெரீனா கடற்கரைப் போராட்டக்களத்திலும் இளைஞர்கள் ஒரே குரலில் கூறி வருகின்றனர். எனவே முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் உத்தரவாதமும், பேச்சும் போராட்டக்காளத்தில் உள்ளவர்களின் மத்தியில் எடுபடவில்லை என்பதே எதார்த்தமாகும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications