சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக-கேரள எல்லைகளில் சோதனை தீவிரம்
நெல்லை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக-கேரளா எல்லைகளில் இருமாநில காவல்துறையினரும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மறுதினம் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான செங்கோட்டை புளியரை பகுதி சோதனை சாவடி மற்றும் கேரள மாநிலம் ஆரியங்காவு ஆகிய சோதனை சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக-கேரள எல்லை பகுதியான செங்கோட்டை புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் 24 மணி நேரமும் சுமார் 2 ஆயிரம் கார், பேரூந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வழியே தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணிக்கவும், இரு மாநில எல்லைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக சோதனைகள் நடைபெற்று வருகிறது.

செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் பிரதாபன் தலைமையில் 24 மணி நேர தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகள் முழு சோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications