அதிமுக பொதுச் செயலராக தயங்கும் சசிகலா... தூண்டிவிடும் மன்னார்குடி கேங்!
மத்திய அரசின் நெருக்கடியால் அதிமுக பொதுச்செயலராவதற்கு சசிகலா தயங்குகிறார்; ஆனால் அவரை பொதுச்செயலராக்குவதில் மன்னார்குடி கோஷ்டி படுமும்முரமாக இருக்கிறது.
சென்னை: அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள துடியாய் துடிக்கிறது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் மத்திய அரசின் கடும் நெருக்கடி மற்றும் மிரட்டலால் 'அக்னி பரீட்சை'க்கு சசிகலா அச்சப்படுகிறாராம்... அவரை எப்படியும் குறைந்தபட்சம் அதிமுக பொதுச்செயலராக்கிவிடுவது என்பதில் மன்னார்குடி கோஷ்டி படுதீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே கட்சி, ஆட்சி நிர்வாகத்தை சசிகலாவின் மன்னார்குடி கோஷ்டி கைப்பற்ற முயற்சித்தது. இதற்கு மத்திய அரசு கடும் முட்டுக்கட்டை போட்டது.
ஜெயலலிதா மறைந்த பின்னர் புதிய முதல்வர் தேர்வு விவகாரத்திலும் சசிகலா தரப்பை அடக்கி வைத்தது மத்திய பாஜக அரசு. ஆனாலும் சசிகலாவை சின்னம்மாவாக்கி அவரை பொதுச்செயலராக்கிவிட வேண்டும் என்பதில் தொடர்ந்து 'நாடகங்களை' நடத்தி வருகிறது மன்னார்குடி கோஷ்டி.

சின்னம்மா புகழ்
நாள்தோறும் சென்னைக்கு அதிமுக நிர்வாகிகளை வரவழைத்து 'சின்னம்மா' புகழ்பாட வைத்து துண்டிவிட்டு வருகிறது மன்னார்குடி கோஷ்டி. ஆனால் அடுத்தடுத்து ரெய்டுகளால் ரொம்பவே ஆடிப்போய்விட்டாராம் சசிகலா.

சசிகலா அச்சம்
அதிமுக பொதுச்செயலர், முதல்வர் பதவி கோஷங்கள் தம்மை சிறையில்தான் தள்ளும் என திடமாகவே நம்புகிறாராம் சசிகலா. ஆனால் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் கட்சியையாவது நம் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறது மன்னார்குடி கோஷ்டி.

ஓபிஎஸ் லாபி
அதே நேரத்தில் ஆட்சியும் கட்சியும் தமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் விரும்புகிறார். இதைத்தான் மத்திய அரசிடமும் ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார்.

சசிக்கு ஆதரவாக தீர்மானம்
இதனால் வரும் 29-ந் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மன்னார்குடி தரப்போ, சசிகலாவை அதிமுக பொதுச்செயலர் பதவி ஏற்க வலியுறுத்தி ஒரு தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறது; அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்போ, அதிமுகவில் 5 ஆண்டுகாலம் சசிகலா தொடர்ந்து உறுப்பினராக இல்லாததால் அவர் பொதுச்செயலராக முடியாது; அத்துடன் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா பொதுச்செயலராகமாட்டார் என திடமாக நம்புகிறது.

துணைப் பொதுச்செயலர்கள்
இதனிடையே சசிகலாவுக்கு எழுந்து வரும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் அதிரடியாக ஜாதிக்கு ஒரு துணை பொதுச்செயலர் பதவியை தரவும் ஆசைகாட்டி வருகிறது மன்னார்குடி தரப்பு என்கின்றன அதிமுக வட்டாரங்கள். அதேநேரத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதே நாளில் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கவும் அதிருப்தி அணி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications