அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. மீண்டும் அழுத்தி சொன்ன மாஜி அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பொதுச்செயலாளர் சொல்லிவிட்டார். எங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதிமுகதான் கூட்டணிக்கு தலைமையேற்கும். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று என்று இரு கட்சியின் தலைவர்களும் கூறி வருகின்றனர். பாஜகவின் டெல்லி தலைமை அதிமுக உடன் கூட்டணி என்று அறிவித்தாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு அப்படியே உறுதி செய்யாமல் மழுப்பலாகவே பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பேசிய அண்ணாமலை, பாஜக-அதிமுக கூட்டணி என்பது கல்லில் எழுதப்பட்டது கிடையாது. அதனால், கூட்டணி தொடர்பாக மாநில தலைவராக என்னுடைய கருத்தை கூறியிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

Alliance only with parties that accept AIADMK leadership, Sellur Raju again insisted

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய அதிமுக கூட்டணியை உறுதி செய்வது டெல்லி தலைமைதான்.. மாநில தலைமை இல்லை என்று பதிலடி கொடுத்தது. பாஜக, அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவரும் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இத்தகைய சூழலில், பாஜக தலைமையில் தான் கூட்டணி என்று அண்ணாமலை மீண்டும் பேசியிருந்தார்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி வைப்போம்" என்று கூறினார். இது தொடர்பாக செல்லூர் ராஜு கூறியதாவது:- "அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பொதுச்செயலாளர் சொல்லிவிட்டார். எங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அவர்களின் நிலைப்பாடு அது. எங்கள் பொதுச்செயலாளரின் நிலைப்பாடுதான் எங்களுக்கு.. அதிமுகதான் கூட்டணிக்கு தலைமையேற்கும். அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி வைத்துக்கொள்வோம்" என்றார்.

Alliance only with parties that accept AIADMK leadership, Sellur Raju again insisted

ஓபிஎஸ் அணி சார்பில் வரும் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் செல்லூர் ராஜூவிடம் கேட்டனர். அப்போது செல்லூர் ராஜூ கூறியதாவது:- "அவர் மாநாடு நடத்தி விட்டு போகிறார். அவர் கடையை விரிக்கிறார். ஒன்றுபட்ட அதிமுக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அவர் எதையாவது செய்ய வேண்டும் என்று செய்து கொண்டு இருக்கிறார். மக்கள் மறந்து விடுவார்கள் என்பதற்காக இப்படி செய்து கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+