யாரெல்லாம் கலப்படம் செய்றாங்கன்னு எப்படி சொல்றது.. ரகசியத்த பூரா கேக்காதீங்க- ராஜேந்திர பாலாஜி
பாலில் கலப்படம் செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அரசு கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா ஐஏஎஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

கலப்பட ஆய்வு
எல்லா நிறுவனங்களும் கலப்படம் செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. சில நிறுவனங்களின் பாலை ஆய்வு செய்ததில் ரசாயனம் கலக்கப்பட்டிருந்தது தெரிந்தது. மாவட்ட மற்றும் மாநில அளவில் பாலில் ரசாயனம் குறித்த ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரிஜினல் பால்
மக்களுக்கு ஒரிஜினல் பால் கிடைக்கம். கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் இனி தமிழகத்தில் இயங்க முடியாது. தரமாக இயங்கும் நிறுவனங்களுக்கு மரியாதை அளிக்கப்படும். தப்பு செய்யும் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் செய்ய முடியாது. சென்னையில் நடத்திய ஆய்வு முடிவுகள் அரசுக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில்தான் நான் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தேன்.

கலப்படமில்லா ஆவின்
தமிழக அரசு நடத்தும் ஆவின் பாலில் கலப்படம் இல்லை. வேண்டுமென்றால் இந்திய அரசு நடத்தும் ஆய்வகங்களில் ஆய்வு நடத்தி பாருங்கள். அப்போது ஆவின் பாலில் எந்தவித கலப்படமும் இல்லை என்பது தெரிய வரும்.

எச்சரிக்கை
என் நோக்கம் மக்களை அச்சப்படுத்துவது அல்ல. மக்களை எச்சரிப்பதுதான். அப்போதுதான் மக்கள் நல்ல பாலைத் தேடிச் செல்வார்கள். தயிர் என்ற பெயரில் கெமிக்கல் கலந்த ஒன்றை மக்களுக்கு விற்கப்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications