சசிகலா இல்லாத வாழ்க்கையா.. முடியலை... தண்டவாளத்தில் பாய்ந்து.. தலையைக் கொடுத்த கணவர்!
ரயில் முன் பாய்ந்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்
திருப்பத்தூர்: சசிகலா இல்லாமல் வாழவே முடியவில்லை.. அதனால் பைக்கை எடுத்து கொண்டு நேராக ரயில்வே ஸ்டேஷன் போய், அங்கிருந்த தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டு.. உயிரையும் விட்டுவிட்டார் கணவர்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ளது நாச்சியர்குப்பம்.. இங்கு வசித்து வந்தவர் ராஜேஷ்.. 34 வயதாகிறது.. ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவிதான் சசிகலா.. அவருக்கு 33 வயதாகிறது.. மேனேஷ் என்று 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக சசிகலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்... இந்த திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போய்விட்டார் ராஜேஷ்.. மனைவியின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார்... கதறி அழுதவாறே அடக்கமும் செய்தார்.
ஆனால், அன்றிலிருந்தே அழுது கொண்டே இருந்தார்.. ஒருக்கட்டத்தில் வேதனை அதிகமாகி ராஜேஷ் மனைவியிடமே போய்விடலாம் என்று முடிவெடுத்துவிட்டார்.. அதற்காக கண்ணடிகுப்பம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பைக் ஓட்டிகொண்டு வந்தார்.
ஒரு ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு, தண்ணி அடிக்க ஆரம்பித்தார்.. அளவுக்கு அதிகமாக குடித்துமுடித்தார்.. பிறகு தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து கொண்டார்.. அந்த வழியாக பெங்களூரு - சென்னை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்..
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள், தலை துண்டாகி கிடந்த சடலத்தை கண்டு அலறி அடித்து கொண்டு ஓடினர்.. உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து ராஜேஷ் உடலை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்ய ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையும் நடந்து வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications