For Daily Alerts
Just In
விஷால் வேட்புமனுவை நிராகரித்தது ஜனநாயகப் படுகொலை - அமீர்
ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அமீர் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் அறிவித்தார். அப்போதே இயக்குநர் அமீர், யாரை எதிர்த்து விஷால் போட்டியிடுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் விஷாலின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து
கருத்து கூறியுள்ள நடிகர் அமீர்,தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் இன்னமும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அமீர்.
Comments
English summary
Dorector Ameer have come down heavily on election officials for rejecting the nomination of actor Vishal in the RK Nagar by-election.
Story first published: Wednesday, December 6, 2017, 12:15 [IST]