ஜெ. மறைவுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை நாடுகளும் இரங்கல்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, பல்வேறு வெளிநாட்டு தூதரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அப்துல் பஷீத் தனது டிவிட்டில் "முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இதயப்பூர்வ இரங்கல்" என குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல இந்தியாவுக்கான அமெரிக்க, இஸ்ரேல், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்திரேலியா தூதரகங்களும் இரங்கல் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது காலமானவர் என்பதால், தூதரக உறவு கொள்கைப்படி இந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறையில் அனுபவம் உள்ள வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications