தைரியம் இருந்தால் பூணூலை வெட்ட வாங்க.. அழைப்பது காங். நிர்வாகி
Recommended Video
சென்னை: யாருக்காவது தைரியம் இருந்தால் எனது பூணூலை வெட்ட வரட்டும் என டுவிட்டரில் புகைப்படம் போட்டு அழைப்புவிடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்.
பூணூல் அணிந்தபடியுள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், "எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்ஙளை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூநூலை வெட்ட வரட்டும்.. அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, ஹிந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்ஙளை கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப் பட்டு, தண்டிக்கப் பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. pic.twitter.com/yzZY4jpKdO
— V Narayanan-Americai (@americai) March 7, 2018
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சிலரிடம் பூணூலை அறுத்ததாக ராயப்பேட்டை போலீசில், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த நால்வர் நேற்று சரண் அடைந்தனர். இந்த நிலையில், அமெரிக்கை நாராயணன் இவ்வாறு டுவிட் வெளியிட்டுள்ளார்.