இன்டர்நெட் மையத்தில் அமெரிக்க மாணவர் மீது பயங்கர தாக்குதல்: ஊழியர்கள் 3 பேரிடம் விசாரணை
சென்னை: சென்னையில் இன்டர்நெட் மையத்தில் அமெரிக்க மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அம்மைய ஊழியர்கள் மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் 32 வயது கெவின் பெர்னார்டு என்ற மாணவர். கடந்த வாரம் இந்தியா வந்த இவர், நேற்று சென்னை வந்துள்ளார். நேற்று மாலை அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோருக்கு மெயில் பண்ணுவதற்காக பெரியமேட்டில் உள்ள இண்டர்நெட் மையத்திற்கு சென்றுள்ளார்.
இண்டர்நெட் கட்டணம் செலுத்துவதில் கெவினுக்கும் அம்மைய ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கெவுன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியமேடு போலீசார் இன்டர்நெட் மைய ஊழியர்கள் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்கப்பட்ட அமெரிக்க சுற்றுலா பயணி கெவின் மருத்துவ படிப்பில் சேர முயற்சித்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications