Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் அம்மா குடிநீர் .. 304 மையங்கள், 268 பஸ் ஸ்டாண்ட், 36 கடைகளில் கிடைக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 304 விற்பனை மையங்களில் இதைப் பெறலாம்.

அதேபோல மாநிலம் முழுவதும் 268 பஸ் நிலையங்கள், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

ஒரு லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்க்கு

ஒரு லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்க்கு

ஒரு லிட்டர் தண்ணீர் 10 ரூபாய் என்ற விலையில் அம்மா குடிநீர் பாட்டில்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டியில்

கும்மிடிப்பூண்டியில்

கும்மிடிப்பூண்டியில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையமும் தொடங்கப்பட்டுள்ளது. இதையும் நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நேற்றே சென்னையில் விற்பனை தொடக்கம்

நேற்றே சென்னையில் விற்பனை தொடக்கம்

இதையடுத்து நேற்று சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மொத்தம் 43 இடங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை தொடங்கியது.

சென்னையில் எங்கு கிடைக்கும்...

சென்னையில் எங்கு கிடைக்கும்...

சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே, அண்ணாநகர், பெருங்களத்தூர், தாம்பரம், எழும்பூர், தியாகராய நகர், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 43 பஸ் நிலைய விற்பனை மையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் கிடைக்கும்.

ஆர்வத்துடன் பாட்டிலை வாங்கிய மக்கள்

ஆர்வத்துடன் பாட்டிலை வாங்கிய மக்கள்

மக்களுக்கு இந்த அம்மா குடிநீர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் நேற்றே ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு பாட்டில்களை வாங்கிச் சென்றனராம்.

10 நிமிஷத்தில் 10,000 பாட்டில்கள் காலி

10 நிமிஷத்தில் 10,000 பாட்டில்கள் காலி

அத்தனை இடங்களிலும் நேற்று பத்தே நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்றுத் தீர்ந்ததாம். கோயம்பேட்டில் மட்டும் 5 ஸ்டால்கள் போட்டு அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாம்.

ஆளுக்கு ஒரு பாட்டில் கொடுங்க...

ஆளுக்கு ஒரு பாட்டில் கொடுங்க...

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு விடப்பட்டுள்ள கிளாசிக் பஸ்களிலும் நேற்று அம்மா குடிநீருக்கு அமோக ஆதரவாம். அத்தனை பயணிகளும் ஆளுக்கு ஒரு பாட்டிலாக வாங்கி விட்டனர்.

இன்று முதல் விறுவிறு விற்பனை

இன்று முதல் விறுவிறு விற்பனை

அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு அம்மா குடிநீர் பாட்டில்களை மக்களுக்கு கிடைக்க செய்துள்ளனர் அதிகாரிகள்.

பஸ்களில் கிடைக்கும்

பஸ்களில் கிடைக்கும்

அனைத்து தொலைதூர பஸ்களிலும் இன்று அம்மா குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சாலையோர உணவகங்கள், ஓட்டல்களிலும் குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 304 மையங்கள்

மொத்தம் 304 மையங்கள்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 39 விற்பனை மையங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 12 மையங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பி் 69 மையங்கள், கும்பகோணம் கோட்டம் சார்பில் 54, சேலம் கோட்டத்தில் 38, கோவை கோட்டத்தில் 39, மதுரை கோட்டத்தில் 31, திருநெல்வேலி கோட்டத்தில 22 என மொத்தம் 304 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பஸ் நிலையங்களில்

பஸ் நிலையங்களில்

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 268 பஸ் நிலையங்களிலும், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+