இன்று முதல் அம்மா குடிநீர் .. 304 மையங்கள், 268 பஸ் ஸ்டாண்ட், 36 கடைகளில் கிடைக்கும்!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 304 விற்பனை மையங்களில் இதைப் பெறலாம்.
அதேபோல மாநிலம் முழுவதும் 268 பஸ் நிலையங்கள், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

ஒரு லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்க்கு
ஒரு லிட்டர் தண்ணீர் 10 ரூபாய் என்ற விலையில் அம்மா குடிநீர் பாட்டில்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டியில்
கும்மிடிப்பூண்டியில் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையமும் தொடங்கப்பட்டுள்ளது. இதையும் நேற்று முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நேற்றே சென்னையில் விற்பனை தொடக்கம்
இதையடுத்து நேற்று சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மொத்தம் 43 இடங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை தொடங்கியது.

சென்னையில் எங்கு கிடைக்கும்...
சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், பிராட்வே, அண்ணாநகர், பெருங்களத்தூர், தாம்பரம், எழும்பூர், தியாகராய நகர், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 43 பஸ் நிலைய விற்பனை மையங்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் கிடைக்கும்.

ஆர்வத்துடன் பாட்டிலை வாங்கிய மக்கள்
மக்களுக்கு இந்த அம்மா குடிநீர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியதால் நேற்றே ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு பாட்டில்களை வாங்கிச் சென்றனராம்.

10 நிமிஷத்தில் 10,000 பாட்டில்கள் காலி
அத்தனை இடங்களிலும் நேற்று பத்தே நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்றுத் தீர்ந்ததாம். கோயம்பேட்டில் மட்டும் 5 ஸ்டால்கள் போட்டு அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டதாம்.

ஆளுக்கு ஒரு பாட்டில் கொடுங்க...
முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு விடப்பட்டுள்ள கிளாசிக் பஸ்களிலும் நேற்று அம்மா குடிநீருக்கு அமோக ஆதரவாம். அத்தனை பயணிகளும் ஆளுக்கு ஒரு பாட்டிலாக வாங்கி விட்டனர்.

இன்று முதல் விறுவிறு விற்பனை
அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், அனைத்து பஸ் நிலையங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு அம்மா குடிநீர் பாட்டில்களை மக்களுக்கு கிடைக்க செய்துள்ளனர் அதிகாரிகள்.

பஸ்களில் கிடைக்கும்
அனைத்து தொலைதூர பஸ்களிலும் இன்று அம்மா குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சாலையோர உணவகங்கள், ஓட்டல்களிலும் குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 304 மையங்கள்
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 39 விற்பனை மையங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 12 மையங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சார்பி் 69 மையங்கள், கும்பகோணம் கோட்டம் சார்பில் 54, சேலம் கோட்டத்தில் 38, கோவை கோட்டத்தில் 39, மதுரை கோட்டத்தில் 31, திருநெல்வேலி கோட்டத்தில 22 என மொத்தம் 304 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பஸ் நிலையங்களில்
மேலும் தமிழ்நாட்டில் உள்ள 268 பஸ் நிலையங்களிலும், 36 சாலையோர உணவகங்களிலும் அம்மா குடிநீர் பாட்டில்களை கிடைக்க செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications