முட்டை வடிவில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு: டிடிவி தினகரன்
முட்டை வடிவில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்திருப்பதாக தினகரன் கூறினார்.
Recommended Video

கோவை: திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் ரெய்டு துவங்கிவட்டதாகவும் முட்டை வடிவில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்துள்ளதாகவும், விரைவில் அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:
நான் நினைத்திருந்தால் 2001-லேயே முதலமைச்சராக ஆகியிருக்கலாம். நான் புறவழியில் வர விரும்புபவன் அல்ல. 234 தொகுதியிலும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வேன், இல்லையேல் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன், ஆனால் பதவிக்காக யார் காலிலும் விழமாட்டேன்.

பணம் கொடுத்தோ, பிரியாணியோ, முட்டை கொடுத்தோ, மது கொடுத்தோ கூட்டத்தை சேர்க்கவில்லை. தற்போது திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் ரெய்டு துவங்கிவிட்டது. முட்டை வடிவத்தில் ஆளும் அரசுக்கு அணுகுண்டு வந்துள்ளது. விரைவில் தமிழக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்.
நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும், அதன் பின் சட்டமன்றத்தை காலி செய்ய வேண்டியிருக்கும். மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திணிக்க முயன்றால், மக்களுடன் இணைந்து அமமுக போராடும். பன்னீர்செல்வம் மகன், பி.ஹெச் பாண்டியன் மகன் கட்சி பொறுப்புகளில் உள்ளனர், ஆனால் எங்களை குடும்ப ஆட்சி என்கின்றனர்.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு பின், அமமுக 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். 234 தொகுதிகளும் ஆர்.கே.நகர் தொகுதி தான், மீண்டும் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவோம்.
இவ்வாறு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.












Click it and Unblock the Notifications