ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்.. ஹைகோர்ட்டில் தீபக் மனு!
ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாக தீபக் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் தான்தான் ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என்பதை உறுதி செய்ய அவரது உடலை தோன்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் ஜெயலலிதாவுக்கு சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்கக்கோரி அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைத்தே அம்ருதா பொய் வழக்கு தொடர்ந்துள்ளார் என தீபக் தெரிவித்துள்ளார். மேலும் தமது பாட்டி சந்தியாவுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா மட்டுமே வாரிசுகள் என்றும் தீபக் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு ஷைலஜா என்ற சகோதரியே கிடையாது என்றும் தீபக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications