"எங்கய்யா என்னை விட்டு போனால் நான் என்ன பன்னுவேன்"... காவேரி மருத்துவமனையில் மூதாட்டி குமுறல்
காவேரி மருத்துவமனையின் வெளியே உட்கார்ந்து கொண்டு பாட்டி ஒருவர் கருணாநிதியின் உடல்நிலைக்காக அழுத காட்சிகள் உருக்கமாக இருந்தது.
Recommended Video
சென்னை: காவேரி மருத்துவமனையின் வெளியே உட்கார்ந்து கொண்டு பாட்டி ஒருவர் கருணாநிதியின் உடல்நிலைக்காக அழுத காட்சிகள் உருக்கமாக இருந்தன.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு ரத்த அழுத்தம் குறைந்தது.
இதையடுத்து அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஏராளமான தொண்டர்கள் கண்ணீருடன் காத்து கிடக்கின்றனர்.
அந்த வகையில் அனைவரின் கவனத்தையும் ஒரு மூதாட்டி ஒருவர் ஈர்த்தார். அவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அழுது கொண்டே இருந்தார். பார்த்தால் வெளியூரை சேர்ந்தவர் போல் உள்ளது. அவரது பக்கத்தில் ஒரு பை காணப்பட்டது.
அவர் அழுத காட்சிகள் அனைவரையும் உருக வைத்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.