அந்த விஷயத்தில் கமல் ஒரு தைரியமான மனிதர்... ரஜினியை போட்டுத் தாக்கும் அன்புமணி!
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும், புலி வருது புலி வருது என இழுத்துக் கொண்டிருக்கக் கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் நேற்று முதல் அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5 நாட்கள் புகைப்படங்கள் எடுப்பதற்காக அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர் தான் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது கடவுள் கையில் தான் உள்ளது என்றார். கடைசி வரை அவர் தனது முடிவை தெரிவிக்கவில்லை.

மதுரையில் பேசிய அன்புமணி
இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ரஜினியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள பாமக நிர்வாகியை சந்திக்க வந்த அவரிடம், இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மக்கள் ஏமாற மாட்டார்கள்
அதற்கு பதிலளித்த அன்புமணி, இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தெளிவாக கூறவேண்டும்.

புலி வருது புலி வருது..
20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். ஆனால், உறுதியான கருத்துகளை தெரிவிக்காமல் இருப்பது, புலி வருது புலி வருது என்று சொல்வது போன்றுள்ளது.

நேரடியாக வரனும்
அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக வரவேண்டும். இது போன்று கருத்து தெரிவிப்பது தேவையற்றது.

கமல் தைரியமானவர்
அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் கமல் எப்போதும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார். கமல், ஒரு தைரியமான நபர் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
-
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications