கண்ணியத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் விஜயகாந்த்- அன்புமணி கண்டனம்
சேலம்: ஊடகத்துறையினரை தூ என்று துப்பி இழிவுபடுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பா.ம.க இளைஞரணி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் அருகேயுள்ள மாட்டையாமபட்டி கிராமத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருந்த அன்புமணி அங்கு கபடி வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு இந்தமுறை நடத்தபட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், செய்தியாளர்களை இழிவு படுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், விஜயகாந்த் அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அரசியல் இருப்பவர்கள் கண்ணியத்துடனும், வருங்கால தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.
காணொலி: சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி ஒன்றியம் மாத்தையாம்பட்டியில் கபடி போட்டியை தொடங்கி வைத்து, கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய போது... 27.12.2015
Posted by Anbumani Ramadoss on Sunday, December 27, 2015