தருமபுரியில் இப்போதே அஸ்திவாரம் தோண்டும் பாமக .. 2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க அன்புமணி வியூகம்
தருமபுரி: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி சட்டசபை தொகுதி பாமக வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தருமபுரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

அவர் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வாக்கு சேகரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக உள்ளோம்.
இந்தத் தேர்தலுக்கான களப்பணியில் தொண்டர்கள் தீவரமாக ஈடுபட வேண்டும். அவர்களை நாம் அடிக்கடி சந்திப்பதன் மூலம்தான் ஆதரவ பெற முடியும். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம. எதற்காக நாம் இழந்தோம் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப இந்த முறை செயல்பட வேண்டும்.
வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் பாமக தருமபுரி தொகுதியில் போட்டியிடும். இதில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் பாமக என்ற ஒரு கட்சி இல்லை என்றால் இங்கு மதுபானம் ஆறாக ஓடியிருக்கும். தெரு தெருவாக மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரருக்கும் மதுவை கொடுத்திருப்பார்கள்.
நாம் தொடர்ந்து போராடினால்தான் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியும். தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். அப்போது பொதுமக்களை சந்திக்கும் போது அவர்கள் மனம் மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்பது நன்றாக தெரிகிறது.
இதனால் வரும் 2026 ஆம் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்கும். இதற்கு நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து மக்களுக்கு நன்மைகளை செய்ய முடியும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என தெரியவில்லை. அது போல் வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும் அல்லது யாருடனும் கூட்டணி அமைக்காமல் பாமக தனித்து போட்டியிடும் என்றே தெரிகிறது. பாமக ஆட்சிக்கு வந்தால் இலவச தரமான மருத்துவமனை, இலவச கல்வி, வேலைவாய்ப்பு, மதுவிலக்கு உள்ளிட்டவைகளை அமல்படுத்தும் என அன்புமணி மிகப்பெரிய பட்டியலை போட்டு வைத்துள்ளார். அது போல் ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பு நிழல் நிதிநிலை அறிக்கை என்ற ஒன்றை பாமக ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications