அரவக்குறிச்சி பணம் பறிமுதல் விவகாரம்... அன்புநாதனின் முன்ஜாமீன் நிபந்தனைகள் நீக்கம்
மதுரை: அரவக்குறிச்சி பணம் பறிமுதல் விவகாரத்தில், அன்புநாதனின் முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன்(46). அதிமுக முக்கிய பிரமுகரான கருதப்படும் அன்புநாதனின் குடோன் மற்றும் வீட்டில் கடந்த ஏப்ரல் 22-ந் தேதி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.4,87,33,820 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

தேர்தல் சமயத்தில், இவர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வேலாயுதம்பாளையம் போலீஸார் அன்புநாதன் மீது இரு வழக்குகள் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்குகளில், உயர் நீதிமன்ற மதுரை கிளை அன்புநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த வழக்குகளில் தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தக்கோரி, உயர் நீதிமன்ற கிளையில் அன்புநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புநாதனுக்கு இரு வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்வு செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அன்புநாதன் இனி காவல் நிலையத்தில் கையெழுத்து போடவேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications