Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புராதன சின்னங்கள், கோவில்கள் பராமரிப்பு... நிபுணர்களின் கருத்துகளை கேட்க ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் புராதன சின்னங்கள் மற்றும் கோவில்களை பராமரிப்பது குறித்து பொதுமக்கள், நிபுணர்களின் கருத்துகளை கேட்டு புதிய விதிமுறைகளை உருவாக்க கூட்டம் நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புராதன சின்னங்களை முறையாக பராமரிக்க நிபுணர் குழுக்களை அமைக்கவில்லை என்று பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை ஹைகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

பின்னர் தமிழகத்தில் உள்ள கோவில்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமையில் ஒரு குழுவை ஹைகோர்ட் நியமித்தது. இந்த குழுவும் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள கோவில்களை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது.

பொதுநல வழக்கு:

பொதுநல வழக்கு:

அதேபோல நாமக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 400 ஆண்டு பழமையான கோவில்களை, அபசகுனம் என்று கூறி இடிக்கப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த 2 வழக்குகளையும் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் விசாரித்து கடந்த டிசம்பர் மாதம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

அழியும் புராதன சின்னங்கள்:

அழியும் புராதன சின்னங்கள்:

அதில், "மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கைகளை பார்க்கும்போது, புனரமைப்பு என்ற பெயரில் கோவில்களில் கட்டிட பணிகளை மேற்கொள்ள அனுமதித்தால், புராதன சின்னங்கள் பல அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

தொன்மையை பாதுகாப்போம்:

தொன்மையை பாதுகாப்போம்:

எனவே, புராதன சின்னங்கள், தொன்மையான கோவில்கள், கட்டிடங்கள், கட்டமைப்புகள் ஆகியவற்றை உரிய முறையில் புனரமைத்து பாதுகாக்க வழிமுறைகளை நிபுணர்களை கொண்டு உருவாக்க வேண்டும். அதுவரை புனரமைப்பு பணிகளில் அவசரமான பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம். மற்ற பணிகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. அரியவகை புராதன சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது" என்று உத்தரவிட்டிருந்தனர்.

நிபுணர்களுக்கு அவமானம்:

நிபுணர்களுக்கு அவமானம்:

இந்நிலையில் மீண்டும் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள், "புராதன சின்னங்களை பராமரிப்பது குறித்து வழிமுறைகளை உருவாக்க ஆலோசனை கூட்டம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தோம். ஆனால் அவர் கூட்டத்தை கூட்டுவதற்கு முதல் நாள், அது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இவ்வாறு செயல்படுவதால், கூட்டத்தை நடத்துவதற்கான நோக்கம் நிறைவேறாது. மேலும், கடைசி நேரத்தில் கூட்டம் குறித்து தகவல் தெரிவிப்பது, நிபுணர்களை அவமானப்படுத்துவதுபோல உள்ளது.

தகவல் தெரிவிக்க உத்தரவு:

தகவல் தெரிவிக்க உத்தரவு:

மேலும், புராதன சின்னங்கள் பராமரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள், தங்களது கருத்துகளை தனித்தனியாக தெரிவிக்க விரும்பினால், ஒரு மாதத்துக்குள் வழங்கவேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்துகளை கொண்டு, புராதன சின்னங்களை பராமரிக்கும் விதிமுறைகளை உருவாக்கும் கூட்டத்தை கூட்டவேண்டும். இந்த சின்னங்கள் பராமரிப்பது குறித்து பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை பெற்றுக்கொள்ளலாம். அதன்பின்னர் நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் கூட்டுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அனைத்து நிபுணர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தகவல் தெரிவிக்கவேண்டும்.

பாதுகாக்க அரசு உதவிகள்:

பாதுகாக்க அரசு உதவிகள்:

இந்த கூட்டத்தில் புராதன சின்னங்களை எப்படி திறமையான நிபுணர்களை கொண்டு புனரமைக்கலாம்? என்பது குறித்தும் ஆலோசனை செய்யவேண்டும். இந்த கூட்டத்துக்கு மத்திய அரசும், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையும் தேவையான உதவிகளை செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+